தானத்தின் பலன்கள்:

அன்னதானம்- வறுமையும் கடன்களும் நீங்குகின்றன.

பூமிதானம்- பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் அளிக்கும்.

கோதானம்- ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றைப் போக்குவிக்கும்.

வஸ்திரதானம்- ஆயுளை விருத்தி செய்யும்.

தீப தானம்- கண்பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்.

தேன் தானம்- புத்திர பாக்கியம் உண்டாக்கும்.



அரிசி தானம்- பாவங்களைப் போக்கும்.

தயிர் தானம்- இந்திரிய விருத்தி உண்டாக்கும்.

நெய் தானம்- நோய்களை நிவர்த்தி செய்யும்.

நெல்லிக்கனி தானம்- ஞானம் உண்டாக்கும்.

பால் தானம்- துக்கம் நீக்கும்.

தேங்காய் தானம்- பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.

தங்க தானம்- குடும்ப தோஷம் நிவர்த்தி செய்யும்.

வெள்ளி தானம்- மனக்கவலை நீக்கும்.

பழங்கள் தானம்- புத்தியும் சித்தியும் தரும்.